search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி வழக்கு"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்ககோரி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். #PollachiCase
    சேலம்:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க கேட்டு சேலம் மாவட்ட மக்கள் அரசு கட்சி சார்பில் சேலம் ஜங்சன் தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.

    ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தடையை மீறி மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரையும் கைது செய்தனர். #PollachiCase
    ×